எடுபடுமா பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி?
தங்களை எதிர்த்தால் மட்டுமின்றி, தேவைப்படும் போதில் பாரம்பரியம் மிக்க கட்சிகளை உடைப்பதும் சரி, பிரித்தாளுவதும் சரி பாரதிய ஜனதா கட்சிக்கு கைவந்த கலை. இதற்கு மிகச் சிறந்த, எளிய உதாரணம் மகாராஷ்டிராவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. முதலாவதாக, பால் தாக்கரே நிறுவிய சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்த பாஜக, அப்போதைய தலைவரும் பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே பாஜவின் தலைமையுடன் ஒத்து போக மறுத்ததும், தனது விளையாட்டை துவங்கியது. […]