பாட்டாளி வர்க்கத்தினருக்கு உழைப்பாளர் தின வாழ்த்துகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொழிலாளர்களின் உண்மை தோழனாக என்றென்றும் திமுக திகழ்ந்திடும் என்றும் உலகினை வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு உளங்கனிந்த மே தின வாழ்த்து எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், உழைப்பு என்பது மனித இனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, அதன் அரசியல், சமூகப் பரிணாமத்திற்கும் அடிப்படைக் காரணியாக இருக்கும் உந்து சக்தியாகும். உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் […]
தவெக வேட்பாளர்களுடன் தலைவர் விஜய் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து முதல் முறையாக களம் கண்டுள்ள நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதற்காக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் வாக்குப்பதிவு முடிந்த பின்னர், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அடுத்தகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார். […]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்.30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களில், இடி, […]