நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது முறையாக நாடாளுமன்றத்தில் இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் அமைச்சர் நிர்மலா ஜனாதிபதியை சந்தித்தார்.
இந்த பட்ஜெட்டில் தொழில் துறையினருக்கு வரி குறைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான அறிவிப்புகள், ஊக்குவிப்பு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அம்மாநிலங்கள் தொடர்பான திட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட் ஆகும்.
இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தங்கம், வெள்ளி விலை, சிகரெட், புகையிலை மீதான வரி ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


