நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி, பான் மசாலா மீதான சுகாதார செஸ் வரியை 40% ஜிஎஸ்டி விகிதத்திற்கு மேல் உயர்த்தி அறிவித்தார்.
இதையடுத்து, நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 75 மில்லி மீட்டர் உயர சிகரெட்டுகள் 5 ரூபாய் 40 காசுகள் விலை உயர்ந்துள்ளது.
பில்டர் பொருத்தாத 65 மில்லி மீட்டர் உயர சிகரெட் அதிகபட்சமாக 2 ரூபாய் 5 காசுகள் வரையும், பில்டர் பொருத்தப்பட்ட 65 மில்லி மீட்டர் உயர சிகரெட் அதிகபட்சம் 2 ரூபாய் 10 காசுகள் வரையும் விலை உயர்ந்துள்ளது.
அதேபோல், 65 முதல் 70 மில்லி மீட்டர் உயரத்திலான சிகரெட் 3 ரூபாய் 60 காசுகள் முதல் 4 ரூபாய் வரையும், 75 மில்லி மீட்டர் உயர சிகரெட்டுகள் 5 ரூபாய் 40 காசுகளும் விலை உயர்ந்துள்ளது. மற்ற வகை சிகரெட்டுகள் அதிகபட்சமாக 8 ரூபாய் 50 காசுகள் வரை விலை உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.


