மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்1ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 2000 புள்ளிகள், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 700 புள்ளிகளுக்கு மேலும் மளமளவென சரிந்து கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த அறிவிப்பாலும், இந்தியா மீதான பரஸ்பர வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்ததாலும் இன்று பங்குச் சந்தைகள் பெரும் ஏற்றத்தைக் கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3656 புள்ளிகள் அதாவது 4.48% உயர்வு கண்டு 85,323 புள்ளிகளிலும் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 712 புள்ளிகள் அதிகரித்து 26,300க்கும் மேலாக உயர்ந்து வர்த்தகமாகிறது.
இந்த அதிரடி ஏற்றம், கடந்த சில மாதங்களாக இருந்த ‘டாரிஃப் தடுப்பு’ நீக்கப்பட்டதால், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி, கடும் சரிவிலிருந்து பங்குச்சந்தை மீண்டுள்ளதாகவும் இது தவிர வங்கி, ஆட்டோ குறியீடுகள் அதிக லாபத்துடன் வர்த்தகமாகி சந்தை உயர்வுக்கு வழிவகுத்ததாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், வர்த்தகம் மற்றும் முதலீடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது.


