திமுக இளைஞரணி தென்மண்டல மாநாடு விருதுநகரில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி உள்ளன.
தமிழகத்தை பொருத்தவரை, திமுக -அதிமுக தலைமையிலான கூட்டணிகள் மற்றும் நடிகர் விஜயின் தவெக இடையே மும்முனை போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் அதன் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளது.
மதுரை பொதுக்குழு மற்றும் உடன்பிறப்பே வா சந்திப்பு, கரூர் முப்பெரும் விழா, திருவண்ணாமலை வடக்கு மண்டல மாநாடு, திருப்பூர் மற்றும் தஞ்சையில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு என திமுக அதன் தொண்டர்களுக்கு தொடர்ந்து புத்துயிர் கொடுத்து உற்சாகத்துடன் வைத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, விருதுநர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று திமுக தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
தேர்தல் எதிர்வரும் நிலையில், திமுகவின் இளைஞர் அணி, மகளிர் அணி மாநாடுகள் மண்டல வாரியாக நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில், விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு இன்று மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.


