ஐபிஎல் சூதாட்டத்தில் தோனிக்கு தொடர்பு இருப்பதாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் விவாத நிகழ்ச்சியொன்றில் பேசியிருந்தார்.
இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு ‘தல’ தோனி மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கிரிக்கெட் வீரர் தோனி ரூ.10 லட்சம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
இந்த விவாத நிகழ்ச்சியின் சிடியை எழுத்து வடிவமாக மாற்றுவதற்கான கட்டணமாக ரூ.10 லட்சம் செலுத்தவும், இந்த கட்டணத்தை வரும் மார்ச் 12ம் தேதிக்குள் தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


