வரும் 15ம் தேதி (ஞாயிறு) மகா சிவராத்திரி கொண்டாடப்படுவதாலும், வார இறுதி என்பதாலும், ஏராளமான பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், உள்ளிட்ட இடங்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 125 சிறப்பு பேருந்துகளும் இதன் தொடர்ச்சியாக, நாளை 500, நாளை மறுதினம் 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று விரைவுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
அதே போன்று, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுதினம் 55 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம், மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களையொட்டி சென்னையில் இருந்து 1240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


