தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, இம்மாநிலங்களின் அரசியல் களத்தில் தேர்தல் சூடு பிடித்துள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை, திமுக-அதிமுக தலைமையிலான கூட்டணிகள் தங்களது தோழமைக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தும் குழு அமைத்தல் உள்ளிட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் முதல் நாளாக தேர்தல் பணி தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் துணைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் குழு சென்னையில் இன்று 2வது நாளாக முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதில், பதட்டமான வாக்குச் சாவடி மையங்கள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


