இஸ்லாமியர்கள் அவர்களது மத அடிப்படையிலான நாள்காட்டியின் 9வது மாதமான ரமலான் மாதம் நோன்பு கடைபிடிப்பது வழக்கமாகும்.
இந்தாண்டு நோன்பு பிப்.18ம் தேதி கடைபிடிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், பள்ளிவாசல் நிர்வாகங்களின் கோரிக்கைக்கு இணங்கி, கடந்த ஆண்டுகளைப் போல தமிழக அரசு நோன்பு கஞ்சி தயாரிக்க பச்சரிசி வழங்கியுள்ளது.
இந்த வருட ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க மொத்த அடிப்படையின் கீழ் 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை தென்பட்டதாகவும் அதனால் நாளை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கலாம் என்றும் அரசு தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவித்துள்ளார்.


