தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையொட்டி, இம்மாநிலங்களில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, மாபெரும் திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணி அமைத்து கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன.
இதில் காங்கிரஸ், ஐயூஎம்எல், மமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், அதிமுக தலைமையிலான கூட்டணியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வந்த போது நடந்த பாஜக-அதிமுக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை 2 முறையும் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில், மார்ச் 15ம் தேதி காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில், அனைத்து மாவட்டச் செயலாளர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திமுக மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக மாணவரணி துணைச் செயலாளராக இருந்த ஜெ.வீரமணி, மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


