சர்வதேச சந்தை செயல்பாடுகளின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படை தாக்குதலினால், மேற்கு ஆசிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பாராத விதமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.13,600 ஆக இருந்தது. அதே போல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 360க்கும் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,670க்கும் விற்பனையாகிறது.
அதே நேரம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை 2 தினங்களில் கிராமுக்கு ரூ.420 உயர்ந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
