ஆபரணத் தங்கம் விலையில் தொடர்ந்து நிலையற்றத்தன்மை காணப்பட்டு வருகிறது. ஈரான்-அமெரிக்கா போரினால் தங்கம் விலை உயரும் என்று கணிக்கப்பட்ட நிலையில் இத்தகைய ஏற்றம், இறக்கத்துடன் நிலை கொண்டுள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களுக்கு முன் (மார்ச் 27, 28, 29 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், எந்த மாற்றமும் இல்லை) முறையே ரூ.640, ரூ.1,840 என மொத்தம் ரூ.2,480 உயர்ந்த நிலையில், நேற்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது.
மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து கிராம் ரூ.13,770க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து கிராம் ரூ.13,670க்கு விற்பனையாகிறது.
அதே போல், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.


