உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மக்கள்தொகை கணக்கெடுப்பில் லிவ்-இன் உறவு ஜோடிகள் திருமணமான தம்பதிகளாக பதிவு – மத்திய அரசு

மக்கள்தொகை கணக்கெடுப்பில் லிவ்-இன் உறவு ஜோடிகள் திருமணமான தம்பதிகளாக பதிவு – மத்திய அரசு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும்: மு.க.ஸ்டாலின்

வைபவ் சூர்யவன்ஷி படைத்த 3 மாபெரும் சாதனை

6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி ஆர்ஆர் அதிரடி வெற்றி

மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகள் திருமணமான தம்பதிகளாக பதிவு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 2011ம் ஆண்டு கடைசியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போதும் 2 கட்டங்களாக எடுக்கப்படுவது வழக்கமாகும்.

இந்நிலையில், 2027ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் 2 கட்டங்களாக நடத்தப்படும் எனவும் முதற்கட்டப் பணிகள் வரும் 2027 ஏப்.1 முதல் செப். 30 வரை நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, முதல் கட்டத்தில் வீடுகளை பட்டியல் கணக்கிடும் பணியும், 2வது கட்டத்தில் தனி நபர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.

அந்த வகையில், வீடுகளை பட்டியலிடுவதற்கான முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்களிடம் 33 வகையான கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆக.30 வரை, 45 நாட்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு, அரசிதழ் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான முதற்கட்டப் பணியான வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு, 2026ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி தொடங்க உள்ளது. இதில் 33 கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றின் விவரங்கள் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட உள்ளது.

வீட்டின் உரிமை நிலை, வீட்டில் எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன, உணவுமுறை, குடிநீர் ஆதாரம், எல்பிஜி, தொலைக்காட்சி, மொபைல் போன், கணினி, இணைய வசதி மற்றும் கழிப்பறை வசதி, சொத்து விவரங்கள் உள்ளிட்ட 33 வகையான கேள்விகள் பொதுமக்களிடம் கேட்கப்பட உள்ளன.

உள்ளூர் பகுதிகளின் எல்லைக்குள் இருக்கும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடு எண்ணிக்கை அட்டவணைகளின் மூலம், பொதுமக்களிடம் கேள்வி கேட்டு தரவுகளை சேகரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பில், நிலையான லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகள், திருமணமான தம்பதிகளாகப் பதிவு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இருவரும் தாங்கள் நிலையான உறவில் இருப்பதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர்களிடம் தெரிவித்தால், அதற்கான சட்டப்பூர்வ சான்றிதழ்கள் எதுவும் இல்லாமல், அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையிலேயே கணக்கெடுக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும்: மு.க.ஸ்டாலின்

வைபவ் சூர்யவன்ஷி படைத்த 3 மாபெரும் சாதனை

6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி ஆர்ஆர் அதிரடி வெற்றி

© NewsTimeTN. All Rights Reserved.