ஆபரணத் தங்கம் விலையில் தொடர்ந்து நிலையற்றத்தன்மை காணப்பட்டு வருகிறது. ஈரான்-அமெரிக்கா போரினால் தங்கம் விலை உயரும் என்று கணிக்கப்பட்ட நிலையில் ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.3,040 அதிகரித்து சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாயாகவும் கிராமுக்கு ரூ.380 அதிகரித்து கிராம் ரூ.14,050 ஆகவும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து கிராம் ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ. 255க்கும், கிலோ கட்டி வெள்ளி ரூ.10,000 குறைந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அமெரிக்கா – ஈரான் போர், சர்வதேச சந்தை சூழல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.


