சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இதனிடையே, தற்போது மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கத்துடன் நிலையற்றத்தன்மை காணப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை நேற்று முன்தினம் சரவனுக்கு அதிரடியாக ரூ.2,400 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும், கிராமுக்கு ரூ.300 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,750க்கும் விற்கப்பட்டது. அதே போல, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கும், கிலோ பார் வெள்ளி ரூ.10 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதனிடையே, நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13,850க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் எந்த மாற்றமின்றி கிராம் ரூ,255க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனையாகிறது.
அதே நேரம், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை எந்தவித மாற்றமின்றி கிராம் ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் விலையில் தொடர்ந்து நிலையற்றத்தன்மை காணப்பட்டு வருகிறது. அமெரிக்கா – ஈரான் போர், சர்வதேச சந்தை சூழல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.


