தவெக தலைவரும் தமிழ் திரையுலகின் உச்ச நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தான் பிசியாக இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என்றும், காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்கும்படியும் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சங்கீதாவும் நேரில் வராமல் காணொலி காட்சி மூலம் ஆஜராக நீதிமன்றத்தில் அனுமதி கோரினார்.
விஜய், சங்கீதாவின் இந்த மனுக்கள் இன்றைய விசாரணையில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இருவரும் காணொலி காட்சி மூலம் ஆஜராக நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு இரு தரப்பிலும் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், விஜய் – சங்கீதா இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகாததால் விவாகரத்து வழக்கு ஒத்திக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு குடும்பநல நீதிபதி சசிகலா, இந்த வழக்கை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
தான் நீதிமன்றத்திற்கு வந்தால் கூட்டம் கூடிவிடும் என்று விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளதால், ஜூன் 15ம் தேதி காணொலி காட்சி மூலமே விஜய் ஆஜராகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தனக்கு ரூ.250 கோடி ஜீவனாம்சம், பிள்ளைகளுக்கு தனியாக பணம் கொடுக்கும்படி வக்கீல்கள் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் சங்கீதா கேட்டாராம். அதற்கு பிள்ளைகள் என் பொறுப்பு. ஆனால் ரூ. 250 கோடிக்கு பதிலாக ரூ. 35 கோடி ஜீவனாசம் தருவதாக விஜய் தரப்பில் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

