ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற லக்னோ பந்து வீசியது. கொல்கத்தா அணியின் துவக்க வீரர் டிம் ஷெபர்ட் 2வது ஓவரில் டக் அவுட்டான நிலையில், கேப்டன் ரஹானே 10 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ரிங்கு சிங் 83 ரன், கேமரூன் கிரீன் 34 ரன் எடுத்தனர். லக்னோவில் மோஷின் கான் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய லக்னோ, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன், மார்க்ரம் 31 ரன் எடுத்தனர்.
கொல்கத்தா பந்துவீச்சில் அரோரா, வருண் தலா 2 விக்கெட், ராய், கிரீன், நரைன், கார்த்திக் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் களத்துக்கு வந்த லக்னோ, சுனில் நரைன் வீசிய சூப்பர் ஓவரை எதிர்கொண்டது. பூரண் முதல் பந்திலும், மார்க்ரம் 3வது பந்திலும் நரைன் அவுட்டாக்கினார். பின்னர் 2 ரன் இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில் ரிங்குசிங் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.


