சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
அண்மைக் காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஓரிரு நாட்கள் விலை குறைவதும் அதற்கு மறுநாள் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் ரூ.1,660 குறைந்து விற்பனையான நிலையில், வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது. ஞாயிறு சந்தை விடுமுறை என்பதால் எந்த மாற்றமும் இல்லை.
வாரத்தின் தொடக்க நாளான திங்களன்று (ஏப்.27), 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில், செவ்வாயன்று (ஏப்.28) சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது.
இதனிடையே, ஏப்.29ம் தேதி காலை சவரனுக்கு ரூ.1,200, மாலையில் சவரனுக்கு ரூ.400 என ஒரே நாளில் ரூ.1,600 குறைந்து விற்கப்பட்டது.
மறுநாள் ஏப்.30 தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து கிராம் ரூ.14,050க்கு விற்பனையாகிறது.
அதே நேரம், சில்லறை வர்த்தகத்தில் சென்னையில் வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.270 விற்பனையான நிலையில், இன்று கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து எ கிராம் ரூ.265க்கும், கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.


