தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாமல் திணறியது.
அப்போது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.
அதைத் தொடர்ந்து, விஜய் முதலமைச்சராக கடந்த 10ம் தேதி பதவியேற்றார். அவருடன் என்.ஆனந்த், செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இந்நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்பட 23 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
புதிதாக பதவியேற்ற தவெக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் பட்டியல்:-
- கே.ஏ.செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
- ஸ்ரீநாத் – மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
- எஸ்.கமலி – கால்நடைத்துறை
- சி.விஜயலட்சுமி – பால்வளத்துறை
- ஆர்.வி.ரஞ்சித்குமார் – வனத்துறை
- வினோத் – வேளாண் மற்றும் உழவர் நலத்துறை
- ராஜீவ் – சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை
- பி.ராஜ்குமார் – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
- வி.காந்திராஜ் – கூட்டுறவுத் துறை
- பி.மதன் ராஜா – சிறு, குறு, நடுத்தர தொழில்துறை
- கே.ஜெகதீஸ்வரி – சமூக நலத்துறை
- எஸ்.ராஜேஷ்குமார் (காங்.) – சுற்றுலாத்துறை
- எம்.விஜய் பாலாஜி – கைத்தறி, ஜவுளி மற்றும் கதர் துறை
- டி.லோகேஷ் தமிழ்செல்வன் – வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை
- ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்து துறை
- ரமேஷ் – இந்து சமய அறநிலையத்துறை
- பி.விஸ்வநாதன் (காங்.) – உயர் கல்வித்துறை
- ஆர்.குமார் – செயற்கை நுண்ணறவு, தகவல் தொழில்நுட்பம்
- கே.தென்னரசு – வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை
- வி.சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
- ஜெ.முகமது பர்வாஸ் – தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
- டி.சரத்குமார் – மனிதவள மேலாண்மை துறை
- என்.மரிய வில்சன் – நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை
- கே.விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் கலால் துறை
தமிழ்நாடு அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. இந்த துறைகள் விசிக, ஐ.யூ.எம்.எல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


