தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யாவின் நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான `கருப்பு’ திரைப்படம் . இதன் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இத்திரைப்படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆல்பம் சாங்ஸ் மூலம் ஏற்கனவே பிரபலமான சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பிலிருந்து கடந்த 15ம் தேதி வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு அளித்துள்ளனர். வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது.
மூன்று நாட்கள் கணக்கின்படி, தமிழ்நாட்டில் ரூ.80 கோடி மற்றும் உலகளவில் ரூ.147 கோடி எனவும் தற்போது உலகளவில் ரூ.207 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூர்யா நடிப்பில் உலகளவில் முதலாவதாக ரூ.100 கோடி வசூலித்த படம் ஏழாம் அறிவு' எனக் கூறப்படுகிறது. இதுவரை சூர்யா படங்களிலேயே அதிகளவில் வசூலானது ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடித்து 2013ல் வெளியானசிங்கம் 2′. இப்படம் உலகளவில் ரூ.123 கோடி வசூலித்தது.
தற்போது ஆர்ஜே பாலாஜியின் கருப்பு திரைப்படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது. சூர்யாவுக்கு இந்திய அளவில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படமாகவும், முதல் ரூ.200 கோடி கிளப் படமாகவும் `கருப்பு’ மாறி உள்ளது. இப்படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும் போது ரூ.300 கோடிக்கு மேல் வசூலிக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


