தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பிறகு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக ஆட்சியமைக்க கூட்டணி தர்மத்தை மீறி ஆதரவு தெரிவித்த காங்கிரஸ், அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் இணைந்து செயல்படும் என கூட்டணியை உறுதிசெய்துள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த திமுகவினர் தொடர்ந்து காங்கிரஸை விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸை உதயநிதி விமர்சித்திருந்த நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் அதற்கு பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் மற்றும் இபிஎஸ்ஸை மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “NEET தாள் கசிவில் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதறுகிறது…
4வது முறையாக பெட்ரோல் விலை உயர்ந்து சாமானிய மக்கள் தினமும் சுமையடிக்கிறார்கள்…
ஆனா நம்ம “எப்போதும் பேசுவோம்” தலைவர்கள் மட்டும் Deep Silence Mode-ல!
திரு.உதயநிதி ஸ்டாலின்…
திரு.பழனிசாமி…
ஒருத்தராவது ஒரு வார்த்தை சொன்னாங்களா?
மக்கள் பிரச்சனை வந்தா மவுனம்…
அரசியல் வந்தா மைக்கை பிடிக்க போட்டி!
தமிழக மக்கள் கேட்கிறார்கள்:
இந்த அமைதிக்கு காரணம் என்ன?
அல்லது… “மேலிருந்து” பேசக்கூடாது என்று group call Order வந்திருச்சா?” என விமர்சித்துள்ளார்.


