ஐபிஎல் 19வது தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் குவாலிபயர் 1ல் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஆர்சிபியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 25 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 43 ரன்கள் குவித்து ஆர்சிபி அணிக்கு சிறந்த அடித்தளம் அமைத்து தந்த நிலையில், ஜேசன் ஹோல்டர் பந்தில் பெவிலியன் திரும்பினர்.
இந்த ரன்களுடன் சேர்த்து, நடப்பு சீசனில் கோலி குவித்த ரன்கள் எண்ணிக்கை 600ஐ கடந்தது. இதற்கு முன், 2023, 2024, 2025ம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் போட்டிகளிலும் கோலி 600 ரன்களுக்கு மேல் விளாசி உள்ளார்.
இதன் மூலம், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 4 முறை 600 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.


