தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அரசுமுறை பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய் சென்னை திரும்பினார்.
முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமருடனான 10 நிமிட சந்திப்பில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை, தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்பது உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகளை முதல்வர் விஜய் வலியுறுத்தியிருந்தார்.
அதன் பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்த அவர், தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், தொழில்துறை வளர்ச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தினார்.
தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கேவை சந்திப்பதாக இருந்த நிலையில், விஜய் சந்திக்காதது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.


