தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 31ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் தலைமையில் வரும் 31ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் கேப்டன் ஆலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் உட்கட்டமைப்பு, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் முக்கிய முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.


