உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிப்பு – இதுவரை 2.81 லட்சம் பேர் பதிவு

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிப்பு – இதுவரை 2.81 லட்சம் பேர் பதிவு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 2 (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கால அவகாசம் வரும் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கிய பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இதுவரை 2 லட்சத்து 81 ஆயிரத்து 502 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கட்டணம் செலுத்திய 2 லட்சத்து 17 ஆயிரத்து 627 மாணவர்களில், ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 53 பேர் தங்களது கல்வி மற்றும் இதர சான்றிதழ்களை வெற்றிகரமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

விண்ணப்பப் பதிவு நாளை முடிவடையும் நிலையில், சான்றிதழ்கள் மற்றும் விடுபட்ட ஆவணங்களை முழுமையாகச் சமர்ப்பித்து பதிவேற்றம் செய்ய வரும் ஜூன் 5ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வரும் ஜூன் 5ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஜூன் 8ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த பிறகு, இறுதியான பொதுத் தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 29ம் தேதி அன்று வெளியிடப்படும்.

ரேண்டம் எண், தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு அதிகாரப்பூர்வமாக எப்போது தொடங்கும் என்பது குறித்த விரிவான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து இந்த ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கையில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.