தமிழக முதலமைச்சர் விஜய், திருச்சியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார்.
திருச்சி விமான நிலையம் சென்ற அவருக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புத்தகம், நினைவுப்பரிசு மலர்க்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நேரில் நன்றி கூறுவதற்காக முதல்வர் விஜய் திருச்சி சென்றுள்ளார்.
முதலமைச்சரைக் காண்பதற்காக விமான நிலையத்திலும் அவர் சாலைப் பேரணியாக சென்ற வழிநெடுகிலும் பெருந்திரளான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் கூடியிருந்து அவரை உற்சாகப்படுத்தினர்.


